வன்முறை
அரசியல்இலங்கைசெய்திகள்

‘மே 9’ வன்முறையில் மேலுமொருவர் சாவு!

Share

இம்மாதம் 9 ஆம் திகதி கொழும்பு – கொள்ளுப்பிட்டி பெரஹர மாவத்தை மற்றும் பேர வாவிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நடைபாதையில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்தார்.

குளியாப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் கடந்த 9ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலை மற்றும் மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்ய கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...