saventhira
செய்திகள்இலங்கை

தொழிலுக்குச் செல்வோர் அடையாளத்தை உறுதிப்படுத்தல் கட்டாயமானது!

Share

அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிலுக்குச் செல்வோர், வீதித் தடைகள் இடப்பட்டுள்ள இடங்களில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் கட்டாயமானது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகளை செப்ரெம்பர் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி கூறினார்.

அத்தியாவசிய சேவைகள், விவசாயம், ஏற்றுமதித்துறை, ஆடை கைத்தொழில் உள்ளிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிலுக்கு மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அமர்த்துமாறு நிறுவனத் தலைவர்களிடம் இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...