IMG 20220516 WA0028
அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்களவர் தேவையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் முயற்சி! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

Share

நாகவிகாரை பிக்குவின் கோரிக்கைக்கமையவும் விகாரைக்கு வந்துபோகிறவர்களின் பொழுதுபோக்கு வசதிக்காகவுமே ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது. அதனால் அதன் தேவைகளை நிறைவேற்றவே வட மாகாண ஆளுநர் கேட்கிறார்.இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போது, ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்ட அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடமாகாண ஆளுநர் எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண ஆளுநரின் கருத்தை நாம் கண்டிக்கின்றோம். அது மிகப் பிழையான கருத்து. யதார்த்தம் என்னவென்றால் இனவெறி கொண்ட ஜனாதிபதி தயவில் இருக்கின்ற ஒருவரின் கருத்துக்கு முண்டு கொடுக்கும் வகையில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு சிங்கள தேசியவாதத்திற்கு முண்டு கொடுத்து அவர்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு மாட்டுப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதனை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கு அருகில் இருக்கின்ற குளத்தைப் புனரமைத்து இருக்க முடியும். அது தமிழ் மக்கள் நடமாடக் கூடிய ஒரு மிக முக்கியமான பகுதியில் உள்ள குளம். அதை செய்யாமல் விட்டுவிட்டு இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் செயற்படும் ஒருவரின் நிதியுதவியுடன் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது.

நாகவிகாரை பிக்குவின் கோரிக்கைக்கமையவே ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது. நாக விகாரைக்கு வந்துபோகிறவர்களின் பொழுது போக்கு வசதிக்காகவே அது புனரமைக்கப்பட்டது. அதனை நிறைவேற்றவே ஆளுநர் கேட்கிறார். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இதனை திருத்தியதால் எமக்கு என்ன பயன்? – என்றார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...