IMG 20220515 WA0077
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இனப்படுகொலை! – முள்ளிவாய்க்கால் நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பம்

Share

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் இந்த ஊர்திப் பவனி பயணித்தது.

இந்த ஊர்திப்பவனியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

IMG 20220515 WA0070 IMG 20220515 WA0069 IMG 20220515 WA0075 IMG 20220515 WA0074 IMG 20220515 WA0073 IMG 20220515 WA0076 IMG 20220515 WA0068

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 1
இலங்கைசெய்திகள்

வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம்...

25 6933e6366e508
உலகம்செய்திகள்

கனடாவில் கார் விபத்து: யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர்...

25 69342677b4982
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 10 இலட்சம் அபராதம்!

பலாங்கொடை – பெலிஹுல்ஓயா பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை விற்பனை...

images 3 1
இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தவணை 6 மாதங்கள் இடைநிறுத்தம் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை...