276996331 4921993074516195 5155549462485385903 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா விலகினால் ஆட்சியை பொறுப்பேற்போம்!! – பிரதான கட்சிகள் கூட்டாக வலியுறுத்து

Share

அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியினரும், தேசிய மக்கள் சக்தியினரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக Zoom ஊடாகவே இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஆளுங்கட்சி சார்பில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை என தெரியவருகின்றது. தமது வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளதால் கணினியும் தீக்கிரையாகியுள்ளது. எனவே, கூட்டத்தில் பங்கேற்கமுடியாத சூழ்நிலையென ஆளுங்கட்சியின் தெரியப்படுத்தியுள்ளனர்.

இடைக்கால அரசமைப்பது சம்பந்தமாக பேசப்பட்ட வேளையிலேயே மேற்படி இரு கட்சிகளும், ஜனாதிபதி பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்க தயாரென அறிவித்துள்ளன.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையையும் விவாதத்துக்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...