276996331 4921993074516195 5155549462485385903 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா விலகினால் ஆட்சியை பொறுப்பேற்போம்!! – பிரதான கட்சிகள் கூட்டாக வலியுறுத்து

Share

அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியினரும், தேசிய மக்கள் சக்தியினரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக Zoom ஊடாகவே இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஆளுங்கட்சி சார்பில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை என தெரியவருகின்றது. தமது வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளதால் கணினியும் தீக்கிரையாகியுள்ளது. எனவே, கூட்டத்தில் பங்கேற்கமுடியாத சூழ்நிலையென ஆளுங்கட்சியின் தெரியப்படுத்தியுள்ளனர்.

இடைக்கால அரசமைப்பது சம்பந்தமாக பேசப்பட்ட வேளையிலேயே மேற்படி இரு கட்சிகளும், ஜனாதிபதி பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்க தயாரென அறிவித்துள்ளன.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையையும் விவாதத்துக்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...