சந்திரகாந்தன் வியாழேந்திரன்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பிள்ளையான், வியாழேந்திரன் வீடுகளுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு

Share

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட அரச ஆதரவு அரசியல்வாதிகளில் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரின் பிரதான காரியாலயம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதுடன், ஆவணங்கள், உடமைகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன.

அதையடுத்து மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச ஆதரவு அரசியல்வாதிகளின் இல்லங்கள் மற்றும் அவர்களின் அலுவலகங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் சோதனையிடப்படுவதுடன் ஊரடங்கு நடைமுறையை மீறிவரும் வாகனங்கள் திருப்பியனுப்பப்படும் நிலையும் காணப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...

images 1 9
செய்திகள்அரசியல்இலங்கை

மாணிக்கக்கல் ஏற்றுமதியில் பாரிய வருமான இழப்பு: சட்டவிரோதப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய வரி நடைமுறை!

இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய...