fb photo
அரசியல்இலங்கைசெய்திகள்

58 கைதிகள் மாயம்! – சிறை ஆணையாளர் விளக்கம்

Share

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு , அரச அனுசரணையுடன் சிறைக்கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த குற்றச்சாட்டை சிறைச்சாலை ஆணையாளர் மறுத்துள்ளார்.

சிறைச்சாலை புனர்வாழ்வு முகாமுக்கு நிர்மாணப் பணிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது நேற்றிரவு குழுவொன்று தாக்குதல் நடத்தி இருந்தது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலின்போது 58 கைதிகள் காணாமல்போயுள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும், நேற்றுக் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகக் கைதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர் என்று வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

குறித்த கைதிகளைக் கண்டறியும் நடவடிக்கையில் தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...