5 e1651778572884
அரசியல்இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மே 17 வரை இடைநிறுத்தம்!

Share

நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டம் இன்று மாலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்த மாணவர்கள் நாடாளுமன்றத்தின் நுழைவுப் பகுதியான பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்பின்னர், அங்கு ‘ஹொரு கோ கம’ எனும் பெயரில் மாதிரிக் கிராமம் அமைத்து மாணவர்கள் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், இன்று மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்

அத்துடன் மாணவர்கள் பொலிஸாரின் தடைகளை மீறி நாடாளுமன்ற வளாகத்துக்குள் பிரவேசிக்க முற்பட்டபோது, அதைத் தடுப்பதற்காகப் பொலிஸாரால் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு மற்றும் நீர்த்தரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அதேநேரம், நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பிற்போடப்பட்ட நிலையில், மாணவர்களும் தங்களது போராட்டத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் தற்காலிமாகக் கைவிடத் தீர்மானித்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...