vaiko
இந்தியாசெய்திகள்

பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும்! – வைகோ கோரிக்கை

Share

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பியவர் பாவேந்தர் பாரதிதாசன். பெரியாரால், சிந்தை இனிக்கும் செந்தமிழ் கவிஞராகப் போற்றப்பட்டார். தம் வாழ்நாள் எல்லாம் தமிழுக்காகப் போராடினார். அவரது பிறந்தநாளை, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில், வீரமணி அருமையான கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு வைத்தார்.

யாரும் கேட்காமலேயே பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் ஆகவும், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாள் ஆகவும் அறிவித்து, அரசு ஊழியர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து வரலாறு படைத்த முதலமைச்சர், வீரமணியின் கோரிக்கையை ஏற்று, பாரதிதாசன் பிறந்தநாளை (ஏப்ரல் 29ஆம் திகதி) கொண்டாடுவதும், அந்த எழுச்சியின் அடிப்படையில் எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்… இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்று உறுதி பூணுவதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...