தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு!
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாசகரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியர் உயிரிழப்பு!

Share

யாசகரின் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பத்தரமுல்ல, பகுதியிலேயே நேற்றிரவு இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆயுர்வேத வைத்தியர் பல்பொருள் அங்காடியில், பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியேவந்தபோது, அங்கிருந்த யாசகர் ஒருவர், யாசகம் கேட்டு தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து யாசகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாலபே பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆயர்வேத வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரான யாசகர் சம்பவத்தின் பின்னர், தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...