அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment