3
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு!

Share

கொழும்பு – காலி முகத்திடலில் இன்று ஏழாவது நாளாக அரச எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் போராட்டக்காரர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

‍தமது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களது கோரிக்கைகளாவன:-

♦️ உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பதவி விலக வேண்டும்.

♦️ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச உள்ளடங்கலாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்.

♦️ அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவதுடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள், ஏனைய துறைகளை மீட்டெடுத்தல் வேண்டும்.

♦️ இடைக்கால அரசை ஸ்தாபித்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த நிதி மற்றும் சொத்துக்களைப் மீளப்பெறுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

♦️ ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...

images 4 2
செய்திகள்உலகம்

எச்1பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி;அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்காவின் பிரபலப் பொருளாதார நிபுணர் டேவ் பிராட் (Dave Brat), எச்1பி (H-1B) விசா திட்டத்தில்...

da00bfe0 1dd0 11ef 95bd a16a3f175cc2.jpg
செய்திகள்இலங்கை

பெங்களூரில் இணையவழிப் பாலியல் மிரட்டல்: இலங்கை மாணவரிடம் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் கும்பல்!

பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரால்...

கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது
செய்திகள்அரசியல்இலங்கை

வாழைச்சேனை சம்பவங்கள் பௌத்த-சிங்கள சமூகத்தைத் தூண்டும் சதி: ஞானசார தேரர் எச்சரிக்கை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை போன்ற சம்பவங்கள்...