இந்தியா
இந்தியாவிடமிருந்து மேலும் 2 பில்லியன் கடன்!
மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் சர்வதேச செய்தி சேவைக்கு இந்திய உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
இலங்கை தற்போது உணவு மற்றும் எரிபொருள் உட்பட பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளோம் – என்றார்.
நெருக்கடி நிலையை சமாளிக்க இந்தியா, சீனா உட்பட அயல்நாடுகளிடம் இலங்கை கடன்பெற்றுள்ள நிலையில், மீண்டும் கடன் வழங்குமாறு கோரியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்க முன்வந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login