WhatsApp Image 2022 04 13 at 11.11.47 AM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அராலி மத்தி சிறுவர்களால் கவனவீர்ப்பு போராட்டம்!

Share

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற விபத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை அராலி மத்தி சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் எந்த காலை 9 45 மணியளவில் முன்னெடுத்தனர்.

அராலி மத்தி அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து அராலி சமுர்த்தி வங்கி வரை வீதி வலமாக பதாகைகளை ஏந்திய வண்ணம் வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது விபத்துக்களை தவிர்ப்போம் உயிர்களை காப்போம்! ! அழிக்காதே அழிக்காதே உயிர்களை அழிக்காதே!, வேண்டாம் வேண்டாம் அதிவேகம் வேண்டாம்!, கண்ணீரின் வலியறிந்தும் கவனயீனம் தொடர்வது ஏன்!, மதுபோதையில் வாகனம் ஓடுவதை முற்றாக தவிர்ப்போம்!, பயன்தரும் பயிரை முளையிலே கிள்ளி எறிந்தது ஏன்!, உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அண்மையில் யாழ்ப்பாணம் சத்திர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில்,இவ்வாறு இடம்பெறும் விபத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளம் சிறுவர்களின் உயிர்கள் விபத்துக்களால் பறிபோவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 04 13 at 11.11.47 AM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...