மன்னாரில் கடற்படையினர் தீவிர நடவடிக்கை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தமிழகத்துக்குத் தப்பிச் செல்வோரைத் தடுக்க மன்னாரில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

Share

இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வோரைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை மற்றும் வருமானம் இன்மை காரணமாகப் பலரும் தமிழகத்துக்குத் தப்பியோடி வருகின்றனர். இதன்காரணமாக இராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் அதிகமாகக் காணப்படும் என்பதால் தமிழகத்துக்குத் தப்பியோடுவோரைத் தடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதிக்குப் பின்பு இலங்கையில் இருந்து 39 பேர் தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றுள்ளதால் அதனைத் தடுக்க கடற்படையினர் மற்றும் இரணுவத்தினர் மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்காகக் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கடற்படையினரின் அதிகாரிகள் கூட்டம் நடத்திய அதேநேரம் இராணுவ அதிகாரிகளும் சந்திப்பை மேற்கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...