மன்னாரில் கடற்படையினர் தீவிர நடவடிக்கை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தமிழகத்துக்குத் தப்பிச் செல்வோரைத் தடுக்க மன்னாரில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

Share

இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வோரைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை மற்றும் வருமானம் இன்மை காரணமாகப் பலரும் தமிழகத்துக்குத் தப்பியோடி வருகின்றனர். இதன்காரணமாக இராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் அதிகமாகக் காணப்படும் என்பதால் தமிழகத்துக்குத் தப்பியோடுவோரைத் தடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதிக்குப் பின்பு இலங்கையில் இருந்து 39 பேர் தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றுள்ளதால் அதனைத் தடுக்க கடற்படையினர் மற்றும் இரணுவத்தினர் மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்காகக் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கடற்படையினரின் அதிகாரிகள் கூட்டம் நடத்திய அதேநேரம் இராணுவ அதிகாரிகளும் சந்திப்பை மேற்கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...