Rajitha Senaratne.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

தலைமைத்துவம் தேவைப்படும் போது வழங்குவோம்! – கூறுகிறார் ராஜித

Share

” தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றனர். மதவாதத்தை வெறுக்கின்றனர். இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்க இது சிறந்த ஆரம்பமாகும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இனவாதமும், மதவாதமும்தான் இந்நாட்டுக்கு சாபக்கேடாக இருந்தது. இவற்றை தூண்டிய பிக்குகளை மக்கள் இன்று நிராகரிக்கின்றனர். அதுமட்டுமல்ல நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இது சிறந்த விடயமாகும். தன்னெழுச்சியான போராட்டத்துக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் தேவைப்படும். அதனை நாம் வழங்குவோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். விருப்பு வாக்கு தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் இந்நாட்டில் அரசியல் மறுசீரமைப்பு இடம்பெறும்.” – என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...