ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அரசில் இருந்து விலகி, சுயாதீனமாக செயற்படபோவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அக்கட்சியினரை ஜனாதிபதி அவசரமாக சந்திக்கின்றார்.
ஆட்சியை தக்கவைத்தக்கொள்ள சுதந்திரக்கட்சியின் ஆதரவு இதன்போது கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment