vijaya
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசு! -கோரிக்கை விடுத்தார் விஜயதாச

Share

” புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவும்.” – இவ்வாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் ஏற்படும் நிலைமைக்கு பொறுப்பு கூறவேண்டி வரும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் இன்று அறிவித்தார்.

அத்துடன், 10 கட்சிகளின் கூட்டணியும் தனித்தே செயற்படும் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்த, அநுரபிரியதர்சன யாப்பா, சுதர்ஷினி, நிமல் லான்சா உட்பட மேலும் சிலரும் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர்.

இதன்படி அரசுக்கு ஆதரவு வழங்கிய சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...