பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றிரவு பதவி விலகவுள்ளார் என வெளியான தகவல்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி துறப்பார் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையிலேயே மேற்படி தகவலை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
எனினும், இன்னும் ஓரிரு நாட்களில் தெற்கு அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதியென அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
#SriLankaNews
Leave a comment