சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்குத் தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து கைப்பேசி சேவை வழங்குநர்களிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கையின் முன்வைத்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று காலை அறிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment