3 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி இல்லம் சுற்றிவளைப்பு! – சொத்து இழப்பு 39 மில்லியன் என்கிறார் அஜித் ரோஹண

Share

மிரிஹான பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சொத்து இழப்பு சுமார் 39 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” மேற்படி சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. பல குழுக்கள் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சிஐடியினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

24 பொலிஸார் காயம் அடைந்துள்ளனர். தேசிய வைத்தியசாலை, களுபோவில மற்றும் பொலிஸ் வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

போராடும் உரிமையை பொலிஸார் மதிக்கின்றனர். இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சம்பவங்களின்போது பொலிஸாருக்கு அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.” – என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...