இந்தியா
யாழ். மீனவர் இந்தியாவில் கைது!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தரூபன் (வயது 30) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு – நாகப்பட்டினம் தேவராண்யம் பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்பட்டதை அவதானித்த இந்திய கடலோர காவல் படையினர் படகை சோதனை செய்தனர்.
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login