அகிலவிராஜ் காரியவசம்
அரசியல்இலங்கைசெய்திகள்

எமது நோக்கம் ஆட்சி மாற்றம் அல்ல! – ஐ.தே.க. தெரிவிப்பு

Share

“தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எமது நோக்கம், மாறாக ஆட்சி மாற்றம் அல்ல” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்கே பண்டார தெரிவித்தார்.

“தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீளவேண்டுமெனில் அரசியல் பேதங்களுக்கு அப்பால், தேசிய கொள்கைத் திட்டங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டும். 20 ஆண்டுகள் வரை இணைந்து பயணிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” என்றும் பாலித ரங்கே பண்டார மேலும் குறிப்பிட்டார்.

#SriLankaNewsUN

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...