கைது
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். நகரில் சைக்கிள் திருடிய இளைஞர் சிக்கினார்!

Share

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் சைக்கிளைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சந்தேக்கத்துக்கிடமான முறையில் சைக்கிள் ஒன்றை குறித்த இளைஞர் எடுத்துச் சென்றபோது , அப்பகுதியில் கடமையில் இருந்த யாழ். பொலிஸார் இளைஞரை மறித்து விசாரணைகளை முன்னெடுத்தபோது, சைக்கிளை இளைஞர் திருடிச் செல்வதை அறிந்து அவரைக் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட சைக்கிள்களில் வருவோர், வைத்தியசாலை சூழலில் தமது சைக்கிள்களை நிறுத்திவிட்டுச் செல்லும்போது அவை களவாடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அது தொடர்பில் பல முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் வைத்தியசாலை சூழலில் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

புதிய சைக்கிள் ஒன்றின் விலை தற்போது 35 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...