death 1 1024x680 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த முதியவர் மரணம்!

Share

கண்டி புறநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, வத்தேகம, உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 மணிநேரம் இவர் வரிசையில் நின்றதாகவும், மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வரிசையில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் சேர்க்க்படும்போது அவர் உயிரிழந்துவிட்டார் என தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

நாட்டில் இவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தி மக்களை வதைக்கும் அரசே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என கண்டி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...