PM Modi at Summit for Democracy
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய பிரதமர் பலாலி விமான நிலையம் ஊடாகவே இலங்கைக்கு!

Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாகவே இம்முறை இலங்கை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிரபல சிங்கள இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரபுக்கள், இராஜதந்திரிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகவே வருவார்கள்.

எனினும், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிப்பதற்காகவே மோடி அங்கு வருகிறார் எனக் கூறப்படுகின்றது.

நல்லாட்சியின்போது, பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு அப்போதைய கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் அம்முயற்சி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதியில் மோடியின் இலங்கை பயணம் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...