சமிந்த விஜேசிறி
அரசியல்இலங்கைசெய்திகள்

கௌரவமாகப் பதவி விலக வேண்டும் கோட்டா! – சஜித் அணி அழுத்தம்

Share

“ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு அஞ்சியே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தோல்வியை ஏற்றுக்கொண்ட அவர் கௌரவமாகப் பதவி துறக்க வேண்டும்”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. எனினும், ஜனாதிபதி மௌனம் காத்தார். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் நடைபெறவுள்ளது என்ற தகவல் வந்ததும் அவர் விழித்துக்கொண்டார். மக்கள் கூட்டத்தை கண்டதும் அஞ்சிவிட்டார். அதனால்தான் அர்த்தமற்ற உரையை ஆற்றினார்.

தன்னால் முடியாது, தான் தோல்வி என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே, அவர் கௌரவமாகப் பதவி துறக்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...