வடமாகாண வருமான பரிசோதகர் தொழிற்சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் பொதுக் கூட்டத்திலேயே புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
இதன்படி வடமாகாண வருமான பரிசோதகர் தொழிற்சங்கத்தின் தலைவராக ச.போல்தர்சாந்தும்
செயலாளராக பி்.குருபரனும்
பொருளாளராக தே.ரெனோவும்
உபதலைவராக ம.யோ.இருதயராஜ்ம்
உபசெயலாளராக கா.ஜெயராஜசிங்கமும்
ஆலோசகராக செ.சந்திரகுமாரும் இணைப்பாளர்களாக ரி.சி.றொசான், வ லோகறதன்,சி.பிறேம்குமார்,
சி.கௌரீசன்,வே.சண்முகசுந்தரம், வே.றொபேட் நிக்சன்,ஜெகஜீவன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
#SriLankaNews
Leave a comment