ஜகத் குமார
செய்திகள்அரசியல்இலங்கை

“எதிரணியின் போராட்டத்தால் அரசுக்குப் பாதிப்பே இல்லை”

Share

“கொழும்பில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களால் அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“கொரோனா நெருக்கடியுடன் தொடர்புடைய பல காரணிகளால் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் துயரமடைந்துள்ள போதிலும், நல்லாட்சி அரசுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக இல்லை.

எதிர்க்கட்சியில் இருந்தபோது எமது குழுவினரும் இதுபோன்ற இலட்சக்கணக்கான போராட்டங்களை நடத்தினர். இதனால் எதிர்க்கட்சிகள் பிழைப்பதே தவிர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை .

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் பிணங்களை வைத்து பிழைப்பு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பலர் இருக்கின்றனர். அரசு வழங்கும் வரிச்சலுகையைப் பயன்படுத்தி அவர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

அரசிடம் இருந்து வரிச்சலுகை பெற்று, அதன் பலனை மக்களுக்கு வழங்காத இந்தத் தொழிலதிபர்கள், மக்களுக்குப் பூச்சாண்டி காட்ட முயல்கின்றனர்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...