கோட்டாபய மைத்திரி
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டா ஆட்சியில் பட்டினிச்சாவு! – மைத்திரி விளாசல்

Share

“நல்லாட்சியில் மக்கள் மூன்று நேரமும் உணவு அருந்தினார்கள். ஆனால், இந்த ஆட்சியில் பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.”

– இவ்வாறு விளாசித் தள்ளினார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

“தேசிய அரசமைக்கும் முயற்சிக்கு எமது கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்பதைத் திட்டவட்டமாக கூறிவைக்க விரும்புகின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொனறாகலை மாவட்டக் கூட்டம் இன்று (13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்துடன் நல்லுறவு இருக்கவில்லை. ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தினர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருந்தபோது, அமைச்சர் ஒருவரே அவருக்குத் திருமண அழைப்பிதழை விடுத்தார். எனினும், நல்லாட்சியில் சர்வதேசத்துடனான உறவை பலப்படுத்தினேன். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றேன்.

நல்லாட்சியில் மக்கள் மூன்று நேரமும் உணவு அருந்தினார்கள். உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மக்கள் வீதிகளில் வரிசைகளில் நிற்கவில்லை. இந்த ஆட்சியில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 35
இலங்கை

இலங்கையில் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை: 2026 இறுதிக்குள் விநியோகிக்கத் திட்டம்!

இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை (Digital ID) கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம்...

01 34
செய்திகள்உலகம்

ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல்: அமெரிக்க, இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களுக்கு ஐஆர்ஜிசி எச்சரிக்கை!

ஈரானின் தெஹ்ரானில் உள்ள முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (IUST) மீது அமெரிக்க மற்றும்...

01 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டணப் பட்டியல்: காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் ரத்து!

இலங்கையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப்...

Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...