பஸ் ஊழியர்களுக்கு நிவாரணம்!!
கொவிட் தொற்று நிலைமை காரணமாக வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் இந்த நிவாரண செயற்றிட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
வாகன உதிரிப்பாகங்கள், அத்தியாவசிய பொருள்களை பெற்றுக்கொள்வதற்குரிய பணம் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு தொகை பணம் என்பனவும் வழங்கப்படவுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்காக தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Leave a comment