Vimal
செய்திகள்அரசியல்இலங்கை

விரைவில் குடும்ப ஆட்சிக்கு முடிவு! – சீறுகிறார் விமல்

Share

இலங்கையில் இனி குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. குடும்ப ஆட்சி என்பது இம்முறையுடன் முடிவுக்கு வரும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்துடன், இந்த அரசின்கீழ் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமாட்டோம் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரட்டை குடியுரிமைக் கொண்ட பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். புதிய அரசமைப்பு ஊடாக இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். அதனை நம்பினோம். ஆனால் அந்த உறுதிமொழி மீறப்பட்டது.

பஸில் ராஜபக்ச என்பவர் சூழ்ச்சிக்காரர். நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுபவர். காமினி திஸாநாயக்க காலத்தில் மஹிந்தவுக்கு எதிராக தங்காலையில் போட்டியிட்டவர் அவர். 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரியவர். அதற்கு மஹிந்த ராஜபக்ச உடன்படவில்லை.

அமைச்சு பதவி என்பது தற்காலிகமானது, அது பறிக்கப்பட்டதையிட்டு நான் கவலை அடையவில்லை. இலங்கையில் இனி குடும்ப அரசியலுக்கு இடமளிக்கப்படமாட்டாது. குடும்ப ஆட்சி என்பது இத்துடன் நிறைவுக்கு வரும். ” – என்றார் விமல் வீரவன்ச.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...