ipl auction 2022 live news indian premier league auction latest updates 1024x768 2
விளையாட்டுசெய்திகள்

ஜ.பி.எல் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் இம்மாதம் 24ல் ஆரம்பம்!!

Share

10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது.

போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் புதியதாக களம் இறங்கும் லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுலும், அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கடந்த சீசன்களில் வீராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் பெங்களூர் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அணியில் ஒரு வீரராக அவர் தொடருகிறார்.

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பெங்களூர் அணி நிர்வாகம்தான் இன்னும் கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார் என்பது வருகிற 12-ந் தேதி மாலை அறிவிக்கப்படுகிறது.

அப்போது அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான பாப் டுபெலிசிசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்படவுள்ளார்.

பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மேக்ஸ் வெல்லுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அணி நிர்வாகம், டுபிளசிஸை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ந் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

#SportsNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...