Tissa Kuttiyarachchi
செய்திகள்அரசியல்இலங்கை

பஸில் எந்த முடிவு எடுத்தாலும் நாம் கட்டுப்படுவோம்! – திஸ்ஸ குட்டியாராச்சி

Share

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நாம் வழங்கியுள்ளோம் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸிலுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போதே நிதி அமைச்சருக்கு பின்வரிசை எம்.பிக்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், ‘அசிங்கமான அமெரிக்கர்’ என விமல், கம்மன்பில போன்றவர்கள் தன்னை விமர்சிப்பதால் நிதி அமைச்சர் கவலையில் இருக்கின்றார், அதனை நாம் உணர்ந்தோம்.

பஸில் ராஜபக்ச என்பவர் இந்நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்யாத நபர். போர் காலத்தில் பெரும் பங்களிப்பு செய்தவர். எனவே, விமல், கம்மன்பில போன்றவர்களின் அறிவிப்பு எமக்கும் கவலை அளிக்கின்றது.

அப்படியானவர்கள் எமது அமைச்சரவையில் இருந்தது வெட்கப்பட வேண்டிய விடயம்.” – என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...