IMG 20220306 WA0017
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியாவில் கோர விபத்து! – தந்தை, மகன் பரிதாபச் சாவு!

Share

வவுனியா, பூவரசங்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் பஸ் – மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதி, குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று ஏற முற்பட்டுள்ளது.

இதன்போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள், பஸ்ஸின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிழந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து பஸ்ஸின் மீது தாக்குதல் மேற்கொண்டு பஸ்ஸின் கண்ணாடிகளைச்  சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதில் பதற்ற நிலைமை நிலவியது. பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்தில் 35 வயதுடைய தந்தை மற்றும் 17 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...