sajith
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டா அரசின் நிலை இனி அந்தோகதிதான்! – சஜித் சுட்டிக்காட்டு

Share

அரச கூட்டுக்குள் உட்கட்சி மோதலைக்கூடச் சமாளிக்க முடியாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திண்டாடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நிலையில், நாடு இன்று பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி எப்படித் தீர்க்கப்போகின்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டு கூட்டுப் பொறுப்பை மீறும் வகையில் செயற்பட்டனர் எனக் கூறி விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. இந்த அரசை அரசுக்குள் இருப்பவர்களே வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே விமல், கம்மன்பிலவின் அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியால் பறிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுமதியின்றி இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

எனவே, அரசுக்குள் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

அரசின் நிலை இனி அந்தோகதிதான். மக்கள் அனைவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

நாட்டை நேசிக்கும் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சி விரைவில் மலர ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...