VideoCapture 20220218 110648
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அரசாங்க தகவல் திணைக்கள கிளை யாழில் திறப்பு!!

Share

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் காலை 10 மணியளவில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது.

அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது மாவட்ட அலுவலகமாக இவ் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அமையவுள்ளது.

இதற்கு முன்னர் கண்டி, காலி, அனுராதபுரம், வவுனியா,பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இப்பணியகம் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகளை வார நாட்களில் இங்கு விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இந் நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன் ஆகியோரும் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...