Susil
செய்திகள்அரசியல்இலங்கை

விமர்சனத்தின் எதிரொலி! – அநாதையாக்கப்பட்டுள்ள சுசில்

Share

அரசை கடுமையாக விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தற்போது அரசியல் ரீதியில் அநாதையாக்கப்பட்டுள்ளார்.

அவரை பதவி விலக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்தபோது, சுசில் பிரேமஜயந்தவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியிலுள்ள சில பங்காளிக்கட்சிகள் சுசில் பக்கம் நின்றன. இதனால் தெற்கு அரசியலில் சுசில் புதிய புரட்சி செய்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது சுசிலுக்கு ஆதரவாக எவரும் கதைப்பதில்லை. நிகழ்வுகளுக்குகூட அவரை அழைப்பதில்லையாம். இதனால் அவர் மனம் நொந்துபோய் உள்ளார். தினமும் உயர்நீதிமன்றம் செல்லும் அவர், சில முக்கியமான வழக்குகளை தற்போது கையாண்டுவருகின்றார்.

ஆனால் இது சுசிலின் தந்திரோபாய பின்வாங்கல் என்றும், தருணம்வரும்போது, அவர் அதிரடி காட்டுவார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...