palani
செய்திகள்இந்தியாஇலங்கை

இந்தியாவை பகைக்காதீர்! – அவசரத்துக்கு உதவும் நாடு அதுவே என்கிறார் திகாம்பரம்

Share

அவசரத்திற்கு நமக்கு உதவி புரியும் இந்தியாவை ஒருநாளும் பகைத்துக் கொள்ளக்கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய திகாம்பரம் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கையில் கேஸ், பால்மா, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் அதேவேளை பொருளாதார நெருக்கடியும் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பழனி திகாம்பரம் நாடு இந்தளவு பாரிய சிக்கலில் இருக்கும் போது இந்தியா 900 மில்லியன் கடனுதவி வழங்கி கை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவுடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கும்போது சில தொழிற்சங்கங்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் சீனாவுடன் அவ்வாறு அபிவிருத்திகளை செய்ய முனையும்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதில்லை எனவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...