fire
செய்திகள்இந்தியாஇலங்கைபிராந்தியம்

இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்ட பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி- படகையும் தீயிட்டு எரித்தார்

Share

இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அவரது மீன்பிடி படகு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியது.

பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கத்தின் முன்பாக இன்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வடமராட்சி கடற்பரப்புக்குள் கடந்த வாரம் அத்துமீறிய இந்திய மீனவர்கள், வடமராட்சி மீனவர்களின் வலைகளை அறுத்து நாசப்படுத்தியிருந்தனர்.

அதனால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தனது மீன்பிடி வலைகளை இழந்திருந்த பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளி ஒருவர் இன்று முற்பகல் தனது படகுக்கு தீவைத்ததுடன் தனது உயிரையும் மாய்க்க முற்பட்டார். எனினும் அவரை சக மீனவர்கள் பாதுகாத்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...