photodune 2008349 the drowning man m
இலங்கைஅரசியல்செய்திகள்

நீரில் மூழ்கி ஐவர் பலி!!

Share

உமாஓயா கரந்திஎல்ல பகுதியில் நீராடசென்ற நிலையில் ஐந்து பேர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் நேற்று இடம்பெற்றது.

இந்த நிலையில், காணாமல் போன நான்கு பேர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க்பட்டது.

இந்த நிலையில், காணாமல் போயிருந்த 22 வயதுடைய யுவதியொருவர் சடலமாக இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஹட்டம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21, 19, 23 வயதுகளை உடைய மூன்று யுவதிகளும், 23 வயதுடைய இளைஞனொருவரும் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஹட்டம்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹட்டம்பிட்டிய பகுதியில் உள்ள உறவினர் வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த சிலரே இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹட்டம்பிட்டி பொலிஸார் எமது தமிழ்நாடி செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....