202104201622361740 The synoform vaccine can prevent 90 percent of infections SECVPF
செய்திகள்இலங்கை

3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில்!

Share

இலங்கையில் பயன்படுத்தப்படாத 3 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

26 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளில் 23 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிகள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் எஞ்சியுள்ளவை காலாவதியான பின்னர் அகற்றப்படும் நிலையில் இருப்பதாகவும் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தம் நோக்கில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தங்களது இரத்ததிலுள்ள சர்க்கரையின் அளவினை பரிசோதித்துக்கொள்வது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...