202201271401414905 Cuddalore Two students were killed when an old building SECVPF
செய்திகள்இந்தியா

அகதிகள் கட்டடம் இடிந்து விழுந்து சிறுவர்கள் உயிரிழப்பு!

Share

தமிழ்நாடு – கடலூர் மாவட்டத்தில் இலங்கை ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட, கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு – கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த பழைய கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ஸ்தலத்திலேயே இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை விபத்து நடந்த கட்டிடமானது இலங்கையில் தஞ்சம்கோரிச் சென்ற ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பு எனக் கூறப்படும் அதேவேளை, எவரும் வசிக்காத நிலையில் பழுந்தடைந்த நிலையில் கட்டடங்கள் இருந்தமையால், இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...