26092019BurundiWash110 0
செய்திகள்இலங்கை

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!!

Share

ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தை செலுத்தாதவர்களின் நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க,

கடந்த வருடம் முதல் 1200 மில்லியன் ரூபாவை நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறி உள்ளதாகவும் ஆறு மாதங்கள் அல்லது இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நிலுவையாக உள்ள நீர் பட்டியலுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

27 லட்சத்தி 50 ஆயிரம் பேருக்கு மாதாந்தம் 50 மில்லியன் கனமீட்டர் குடி நீரை வழங்குகின்றோம்.

மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2500 மில்லியன் ரூபாயாக இருந்த நிலுவை கட்டண தொகையை செலுத்தாததனால் டிசம்பர் மாதமளவில் அத்தொகை 7200 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மாதாந்த நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தகட்ட பட்டியலில் 1.5 சதவீதம் தள்ளுபடியும் பணம் செலுத்த தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்தம் 2.5% தாமத கட்டணம் அறவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...