china sl
செய்திகள்அரசியல்இலங்கை

நன்கொடையாக அரிசியா?? – இல்லவே இல்லை என்கிறது சீனா – ஆம் என்கிறது இலங்கை

Share

இலங்கைக்கு நன்கொடையாக ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசி சீனாவால் வழங்கப்படவுள்ளது எனும் தகவலை சீனா மறுத்துள்ளது.

ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு சீன இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசியை நன்கொடையாக வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டது உண்மையே. இருப்பினும் அந்த கோரிக்கையை சீனா மறுத்துள்ளது – என்றார்.

இதேவேளை, இது தொடர்பில்அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவிக்கையில்,

இலங்கை – சீனா இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசி நன்கொடையாக பெறப்படவுள்ளது – என்றார்.

இந்த நிலையில், குறித்த ஆங்கில பத்திரிக்கைக்கு, வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள சீன அரசு இதற்கு இணங்கியுள்ளது. இந்த விடயத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...