Sarath Fonseka
செய்திகள்அரசியல்இலங்கை

ஐ.ம.சக்தி ஆட்சி விரைவில் மலரும்! – சரத் பொன்சேகா

Share

“ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி விரைவில் மலரும். அந்த ஆட்சியில் நான்தான் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நல்லாட்சியின்போது தலைமைப்பதவிகளை வகித்தவர்களின் செயற்பாடுகள் காரணமாகவே அந்த அரசு கவிழ்ந்தது. தற்போதைய அரசும் அப்படிதான். எனவே, விரைவில் எங்கள் ஆட்சி வரும்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சு பதவி எனக்கு வழங்கப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். எமது ஆட்சி வருவது உறுதி என்பதால், எனக்கான அமைச்சு பதவியும் உறுதியாகியுள்ளது.

நல்லாட்சியின்போது, சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை எனக்கு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த பதவி எனக்கு வழங்கப்பட்டால் முதலில் அவரைத்தான் கைது செய்வேன் என அஞ்சினார். அதனால் பதவி வழங்கவில்லை. வழங்கப்பட்டிருந்தாலும் மைத்திரி கூறியது நடந்திருக்கும்.” – என்றார் பொன்சேகா.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...