tirupati balaji
செய்திகள்இந்தியா

வைகுண்ட வாசல் தரிசனம் – 10 நாட்களில் ரூ.26.6 கோடி காணிக்கை!

Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்கள் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 13-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு ஏழுமலையான் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று வரை 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு சென்று வந்தனர்.

அனைத்து பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக குறித்த 10 நாட்களும் தரிசனம் செய்யும் வகையில், அனுமதி வழங்கப்பட்டிருந்தது, இதன்படி ஒன்லைன் டிக்கெட் மூலம் 300 ரூபா செலுத்தி 10 ஆயிரம் பக்தர்களும், ஒன்லைன் இலவச அனுமதியில் 12 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுக்கள் படி 50 ஆயிரம் டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டன.

இந்த நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில், சொர்க்க வாசல் தரிசனம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, தற்போது ஏழுமலையான் உண்டியல் காணிக்கை தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் வைகுண்ட வாசல் வழியாக 3 லட்சத்து 77 ஆயிரத்து 943 பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், ரூ.26.6 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் திருப்பதிக்கு அழைத்துவரப்பட்டு இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு, தங்குமிடம், லட்டு, பிரசாதம் உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...