highway
செய்திகள்இலங்கை

நெடுஞ்சாலைகளால் உயிர் பல்வகைமை பாதிப்பு!

Share

நெடுஞ்சாலைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் சூழல் மாசடைதல் காரணமாக  உயிர்பல்வகைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பறவைகள் உட்பட 500,000 ற்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் சமீபத்திய ஆண்டுகளில் இறந்துள்ளதாக  சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

நெடுஞ்சாலைகளில் வாகனங்கள்  மோதுவதனாலும்  வாகனங்களிலிருந்து வெளியேறும்  மாசுகளாலும் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிடம்  வினவியபோது, ​​

அதிவேக நெடுஞ்சாலைகளில்  சில  வனவிலங்குகளால் பிரச்சினைகள் ஏற்படுவதை ஒப்புக்கொள்கின்றேன்.

இந்நிலையைக் கருத்திற் கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகளின்  இருபுறங்களிலும் பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயன்படுத்தும் மரங்களை வளர்க்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சாலையின் இருபுறமும் விலங்குகளை ஈர்க்கும் மரங்கள் வளர்வதைத் தடுக்க அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக மயில்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் மக்களை எச்சரிக்கும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில வனவிலங்குகள் நெடுஞ்சாலைகளுக்கு வெளியே இறந்து பல்வேறு இடங்களில் கிடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...