Vijitha kerath.jpg
இலங்கைஅரசியல்செய்திகள்

இனியும் நொண்டிச்சாக்குகளை அரசு சொல்ல முடியாது – விஜித ஹேரத்

Share

கொவிட் -19 தொற்று நோயை முன்னிறுத்தி அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கப் பார்க்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசின் இந்த நொண்டி சாக்குகளை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்தகாலங்களில் யுத்தங்களை முன்னிறுத்தி தமது தோல்விகளை மறைத்திருந்தது. ஆனால் தற்போது கொரோனாவைக் காரணம் காட்டுகிறது என பாராளுமன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நாடு இன்று பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எரிவாயு, உரம், அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த பிரச்சினைகளுக்கும் கொவிட் தொற்று நோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை.

பிராந்தியத்திலுள்ள பிற நாடுகள் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, பங்களாதேஷ் பொருளாதார வளர்ச்சி 3% மற்றும் வெளிநாட்டு இருப்பு 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...