இலங்கை

கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் அதிகரிப்பு!

Share

கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை மகப்பேறு மற்றும் மகப்பேறு நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் சனத் லான்ரோல் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாகவும் அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டாக காணப்பட்டதாகவும் தற்போது, அந்த எண்ணிக்கை வாரத்திற்கு ஐந்து அல்லது ஆறு ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில்,

தற்போது கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறையிலுள்ளது.  கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது டோசை பெற்று 12 வாரங்களுக்குப் பிறகு, கர்ப்பிணித் தாய்மார்கள் பூஸ்டர் டோஸினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினை மறந்து சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க தவறியமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக வைத்தியர் சனத் லான்ரோல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம்  முதல் மற்றும் இரண்டாவது கொவிட் 19 தடுப்பூசிகளை பெற்ற குழந்தைகளுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதை தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இதில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லையென தெரிவித்ததுடன்
முதியோர்களுக்கு பூஸ்டர் ஊசிகள் தேவைப்படுவதாகவும், அதன்மூலம் ஓமிக்ரோனோன் பிறழ்வுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்புகள் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Murder Recovered Recovered Recovered 16
இலங்கைசெய்திகள்

நெதன்யாகுவின் வீழ்ச்சி..! இஸ்ரேல் மக்களே வெளிப்படுத்திய விடயம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அந்நாட்டு பொது மக்களின் நம்பிக்கை வெறும் 40 சதவீதமாக...

Murder Recovered Recovered Recovered 13
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது....