இலங்கை

கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் அதிகரிப்பு!

Share

கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை மகப்பேறு மற்றும் மகப்பேறு நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் சனத் லான்ரோல் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாகவும் அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டாக காணப்பட்டதாகவும் தற்போது, அந்த எண்ணிக்கை வாரத்திற்கு ஐந்து அல்லது ஆறு ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில்,

தற்போது கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறையிலுள்ளது.  கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது டோசை பெற்று 12 வாரங்களுக்குப் பிறகு, கர்ப்பிணித் தாய்மார்கள் பூஸ்டர் டோஸினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினை மறந்து சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க தவறியமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக வைத்தியர் சனத் லான்ரோல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம்  முதல் மற்றும் இரண்டாவது கொவிட் 19 தடுப்பூசிகளை பெற்ற குழந்தைகளுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதை தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இதில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லையென தெரிவித்ததுடன்
முதியோர்களுக்கு பூஸ்டர் ஊசிகள் தேவைப்படுவதாகவும், அதன்மூலம் ஓமிக்ரோனோன் பிறழ்வுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்புகள் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...